Vijay TV Bigg Boss 5 Promo | தாமரையை வார்த்தையால் தாக்கி அழுது புலம்ப வைத்த ப்ரியங்கா!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து தற்போது பரபரப்பாக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு தற்போது 65 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் மற்ற சீசன்களை போல இல்லாமல் போட்டியாளர்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளை மட்டுமே வைத்து விளையாடி வருகின்றனர். மற்ற சீசன்களில் நண்பர்கள் கூட்டம் ஒன்று இருக்க, இந்த சீசனில் அப்படி எதுவும் இல்லை, நண்பர்களாக பழகி வருபவர்கள் தற்போது போட்டியில் வெற்றி பெற சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்களுக்கு வேண்டுகோள்! அவரே வெளியிட்ட பதிவு!
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீடு மாநாடு போல மாற்றப்பட்டுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு கட்சிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். டாஸ்க் என்றால் போட்டியாளர்கள் ஆண் பெண் என்று பார்க்காமலும் வயது வித்தியாசம் பார்க்காமலும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தாமரை, அபிநய் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ராதிகா அம்மாவிடம் உண்மையை போட்டுடைத்த கோபியின் அப்பா – வெளியான ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
அதை தொடர்ந்து பிரியங்கா கட்சி வசனம் போல தாமரையை குறிவைத்து பேசுகிறார். எனக்கு தெரியாது தெரியாது என சொல்லி நாடகம் ஆடுவார்கள் என தாமரையை சொல்ல, என் தொழில் நாடகம் போடுவது தான் அதை பேசினால் என்னால் தாங்க முடியாது என சொல்கிறார். பின் ராஜு அவரை சமாதானம் செய்ய, நான் பச்ச குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாமல் நடிக்க போயிருக்கேன் என அழுது புலம்புகிறார். மேலும் அவர் நான் வெளியே போக வேண்டும் நான் நடித்து என்ன ஆக போகுது என அழுகிறார்.