ராதிகா அம்மாவிடம் உண்மையை போட்டுடைத்த கோபியின் அப்பா – வெளியான ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபி, ராதிகாவை மீண்டும் ஒன்றாக பார்த்த அவரின் அப்பா அடுத்து என்ன செய்கிறார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் நடைபெறுகிறது. எழில், அமிர்தாவிடம் காதலை சொல்ல அதை ஏற்றுக் கொள்ளாத அமிர்தா எழிலை வெறுப்பது போல நடந்து கொள்கிறார். அதனால் எழில் வருத்தமாக இருக்க, பாக்கியா தன்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார். முதலில் சமையல் செய்ய தனியாக இடம் பார்த்து விடுகிறார். மேலும் அவரே நடித்து விளம்பர படம் ஒன்றை எழில் எடுக்க அதை சமூக வலைத்தளங்களில் பரப்பி பிரபலமானதை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டிருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் இன்ஸ்டா பதிவு – ‘மிஸ் யூ கண்ணம்மா’! ரசிகர்கள் உருக்கம்!
இந்நிலையில் கதையில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதில் கோபி பூ வாங்கி கொண்டிருக்க, அவரது அப்பா பார்த்து விடுகிறார். யாருக்கு பூ வாங்குகிறான் என பின் தொடர்ந்து பார்க்க, காருக்குள் ராதிகா அமர்ந்திருக்கிறார். அதை பார்த்து கோவப்பட்ட ராமமூர்த்தி இன்னும் நீ திருந்தவில்லையா என நினைத்து வேகமாக ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கே ராதிகாவின் அம்மா மட்டும் இருக்க, இனிமேல் உங்களது மகள் என் மகன் கோபி உடன் பழக கூடாது என சத்தம் போடுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா வெளியிட்ட குழந்தையின் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
பின் கோபி ராதிகா வீட்டிற்கு வர, கோவமாக இருந்த ராதிகாவின் அம்மா சத்தம் போடுகிறார். இவர் அப்பா வந்து என் மகனுடன் சேர்ந்து இருக்க வேண்டாம் என உங்க மகளிடம் சொல்லுங்க என சத்தம் போட்டு சென்றுள்ளார். இனிமேல் இரண்டு பேரும் சேர்ந்து பழக கூடாது என சொல்ல, ராதிகா நடந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்துடன் இருக்கின்றனர்.