‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்களுக்கு வேண்டுகோள்! அவரே வெளியிட்ட பதிவு!
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான ஷபானா. அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.
ஷபானாவின் வேண்டுகோள்:
சின்னத்திரையில் தங்களின் திறமையின் மூலம் ஒரு சில வருடங்களில் அதிக அளவில் ரசிகர்களை சேர்த்துள்ளவர் ஷபானா. ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி தொடர் மூலமாக அறிமுகமானார். இவரின் சொந்த ஊர் கேரளா. ஆனால் வளர்ந்தது, படித்தது அனைத்துமே மும்பையில் தான். ஷபானா அறிமுகம் ஆன சமயத்திலேயே அதிக மக்களின் கவனத்தை பெற்றவர். இவர் விஜயின் தீவிர ரசிகை என்பதால் விருது மேடைகளில் நடிகர் விஜயை போலவே பேசியது மிகவும் வைரலாக பரவியது. மேலும், செம்பருத்தி சீரியலிலும் இவர் நடிக்கும் பார்வதி கத்பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
ராதிகா அம்மாவிடம் உண்மையை போட்டுடைத்த கோபியின் அப்பா – வெளியான ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலிப்பதாக இவர் அறிவித்திருந்தார். இது மிகவும் பரபரப்பான விஷயமாக ராசைகள் மத்தியில் பேசப்பட்டது. திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக இவர்கள் இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஷபானா மற்றும் ஆர்யன் திருமண புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது. அனைத்து தரப்பில் இருந்து இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வந்தது.
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் இன்ஸ்டா பதிவு – ‘மிஸ் யூ கண்ணம்மா’! ரசிகர்கள் உருக்கம்!
இந்நிலையில், ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு பிரச்சனைகள் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர்களின் வாழ்க்கையை முழுதாக வாழ விடுங்கள். அடுத்தவர் மனம் புண் படும் படி எந்த கருத்தையும் தெரிவிக்காதீர்கள். உங்களது ஊகங்களை அவர்கள் மேல் திணிக்காதீர்கள் என்று வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷாபனாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் எதற்காக இவர் இப்படி பதிவு செய்துள்ளார் என்று குழப்பத்தில் உள்ளனர்.