LIC அசத்தல் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.29 சேமித்தால் ரூ.3.97 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
எல்.ஐ.சி வழங்கும் ஆதார் ஷீலா திட்டத்தின் மூலம் தினசரி ரூ.29 ரூபாய் முதலீடு செய்தால் திட்டத்தின் முடிவில் ரூ.3.97 லட்சம் பெற முடியும்.
சேமிப்பு திட்டம்:
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. இதுபோன்ற சேமிப்பு திட்டங்கள் வழங்குவதில் எல்.ஐ.சி முக்கிய பங்கு வகித்து வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு – நவ.24ம் தேதிக்கு மாற்றம்!
எல்.ஐ.சி நிறுவனம் பெண்களால் முதலீடு செய்வதற்காகவே தொடங்கிய திட்டம் எல்.ஐ.சி. ஆதார் ஷீலா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் 8 முதல் 55 வயது உள்ள பெண்கள் அனைவரும் முதலீடு செய்ய முடியும். நீண்ட நாட்களுக்கு குறைந்த தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய லாபத்தை ஈட்ட முடியும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண்கள் தினமும் 29 ரூபாய் என முதலீடு செய்யும் பட்சத்தில் திட்டத்தின் முடிவில் அவர்களுக்கு ரூ.3.97 லட்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆதார் அட்டை கட்டாயமான ஒன்றாகும். பாலிசி முடியும் முன்னரே பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் அந்த தொகையானது அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்து கொள்ளலாம். பாலிசிதாரர் பாலிசி தொகையை மாதம் ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – விபரங்களை பகிர வேண்டாம்!
பாலிசிதாரர் 30 வயதில் இந்த திட்டத்தில் இணைந்து தினமும் ரூ. 29 முதலீடு செய்யும் பட்சத்தில் 20 ஆண்டுகள் முடிவில் ரூ. 2,14,696 முதலீடு தொகையாக இருக்கும். மெச்சூரிட்டியின் போது ரூ. 3,97,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காகவே வழங்கப்பட்டு வரும் இந்த சேமிப்பு திட்டத்தில் பலரும் இணைந்து பயனடைந்து வருகின்றனர்.