SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – விபரங்களை பகிர வேண்டாம்!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் வங்கி விவரங்கள், ஏடிஎம் அல்லது யுபிஐ பின்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று அதிகாரபூர்வமாக எச்சரிக்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மோசடி எச்சரிக்கை:
சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புது தில்லியைச் சேர்ந்த சைபர் பீஸ் அறக்கட்டளையின் ஆய்வுப் பிரிவு, ஆட்டோபோட் இன்ஃபோசெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சீன வம்சாவளியைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஃபிஷிங் மோசடிகளால் SBI பயனர்களை மோசடி செய்த இதுபோன்ற இரண்டு சம்பவங்களை ஆய்வு செய்தது. இதனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), வெள்ளிக்கிழமையான நேற்று (நவம்பர் 19), வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தினசரி விரைவு ரயில் சேவை ரத்து!
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் இது போன்ற மோசடியில் சிக்காமல் இருக்க என்ன என்ன செய்யக்கூடாது என்பதை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ ட்வீட்டில், உங்கள் வங்கி விவரங்கள் மற்றும் ATM அல்லது UPI பின்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் அறிவித்துள்ளது. எஸ்பிஐ அல்லது அதன் ஊழியர்கள் கணக்கு எண்கள், டெபிட் கார்டு விவரங்கள், இணைய வங்கிச் சான்றுகள் அல்லது OTP போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்றும் தெரியாத எந்த ஒரு இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – PF கணக்கில் நாமினை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
எஸ்பிஐ ஊழியர்களை போல் உங்களின் வங்கி விவரங்களை விவரங்களைக் கேட்கக்கூடிய தனிநபர்கள் அல்லது குழுவினரிடம் வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க கூறியுள்ளது. போலியான வங்கி மின்னஞ்சல் ஐடிகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் வங்கி வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், மோசடி தொடர்பான புகார்களை சைபர் கிரைமில் https://cybercrime.gov.in/ இல் பதிவு செய்யலாம். சைபர் கிரைம் புகார்களை பதிவு செய்ய ஹெல்ப்லைன் எண் 155260 ஐ அழைக்கலாம் என்று வங்கி தனது ட்வீட் வீடியோவில் தெரிவித்துள்ளது.