தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு – நவ.24ம் தேதிக்கு மாற்றம்!
தமிழகத்தில் அரசு பழங்குடியினர் நல பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வு வரும் நவம்பர் 24ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அந்த ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அரசுத்துறை சார்ந்த செயல்பாடுகள் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – விபரங்களை பகிர வேண்டாம்!
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தடைபட்ட அனைத்து செயல்பாடுகளையும் அனைத்து அரசுத் துறைகளும் படிப்படியாக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்படும் பணி உயர்வு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது குறித்து நடவடிக்கை எடுத்து அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இயங்கி வரும் பழங்குடியினர் நல பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தினசரி விரைவு ரயில் சேவை ரத்து!
அவ்வாறு முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்துவதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது நாளை நவ.21ம் தேதி காலை 10 மணிக்கு பழங்குடியினர் நல இயக்ககத்தில் கலந்தாய்வு நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக நாளை நடக்க வேண்டிய கலந்தாய்வு வரும் நவ.24ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே குறிப்பிட்ட அதே நேரம், அதே இடம் என்று குறிப்பிட்டுள்ளது.