திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தினசரி விரைவு ரயில் சேவை ரத்து!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு வருகிறது. சென்னை – திருப்பதி இடையிலான தினசரி விரைவு ரயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் திருப்பதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி காட்சியளிக்கிறது. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – PF கணக்கில் நாமினை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
அதே போல் திருப்பதியில் கோவிலை ஒட்டிய தெருக்கள், கடைகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன. மேலும் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக திருப்பதியில் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. எனவே ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் சாலை மற்றும் நடைபாதை தற்காலிகமாக மூட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள் நிலச்சரிவு மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – நெறிமுறைகள் வெளியீடு!
இந்நிலையில் தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சென்னை – திருப்பதி இடையிலான தினசரி விரைவு ரயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4.30 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் தினசரி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.