விஜய் டிவியில் பிரஜின், சரண்யா துராடி நடிப்பில் புது சீரியல் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் சீரியலில் தனக்கொரு தனி இடம் பிடித்த பிரஜின் தற்போது விஜய் டிவியில் புதிதாக சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரஜின் பத்மநாபன்:
தமிழ் சின்னத்திரை மூலமாக 90’ஸ் கிட்ஸ் இடையே பிரபலமாக இருந்தவர் ப்ரஜின். அவர் சின்னத்திரைக்கு முதலில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பின் பல சீரியல்களில் நடித்தார். அதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் ரசிகர்களின் அட்டகாசமான வரவேற்பை பெற்றிருந்தாலும், வெள்ளித்திரையில் எதிர்பார்த்த அளவு இன்னும் அவர் ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை. 2019-ல் மலையாளத்தில் இவர் நடித்த லவ் டிராமா ஆக்ஷன் என்ற திரைப்படம் அவருக்கு வெள்ளித்திரையில் முதல் படம்.
பின் விஜய் டிவி-யில் இது ஒரு காதல் கதை, சன் டிவி-யில் பெண், அஞ்சலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மீண்டும் விஜய் டிவி திரும்பிய பிரஜின், காதலிக்க நேரமில்லை சீரியலில் நடித்து முன்பை விட அதிகம் பிரபலமானார். தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் “நினைவெல்லாம் நீயடா” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பிரஜின் விஜய் டிவியின் புது சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருக்கிறார். வைதேகி காத்திருந்தால் என்ற அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடிகை சரண்யா துராடி நடிக்க உள்ளார்.
பாரதி உடன் நடிக்க பயப்படும் கண்ணம்மா ரோஷினி – சீரியல் இயக்குனர் கூறிய தகவல்! ரசிகர்கள் ஷாக்!
இருவர் சேர்ந்து நடிக்க இருக்கும் சீரியலை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் இதில் சரண்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் லட்சுமி அம்மா நடிக்க இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் சுகுமார் இந்த சீரியலை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் இந்த சீரியல் மாபெரும் வெற்றி அடையும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.