ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வில்லி என்ட்ரி? ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கோபி பாக்கியாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல, அதை ராதிகா பார்த்துவிடுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை பற்றி கதை சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் அனைவரையும் பார்த்துக் கொள்ளும் பெண்ணாக பாக்கியா இருக்க, ஆனால் அவரை பிடிக்காமல் கோபி தனது காலேஜ் காதலியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இந்த விஷயம் தெரிந்த அப்பாவை கூட அவர் மதிக்காமல் இருக்கிறார். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
பாரதி உடன் நடிக்க பயப்படும் கண்ணம்மா ரோஷினி – சீரியல் இயக்குனர் கூறிய தகவல்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாக்கியாவும் கோபியும் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல, அங்கே ராதிகாவும் வருகிறார். அப்போது கோபியை அவரது மனைவி உடன் பார்க்க இருவரும் ஸ்வீட்ஸ் ஊட்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். ஆனால் அவர் மனைவி முகத்தை அவர் பார்க்கவே இல்லை. மேலும் அந்த பெண் கட்டிருக்கும் சேலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
இது நாம் தேர்வு செய்த புடவை தான இது என நினைக்க கோபி சொன்னது எல்லாம் பொய் என ராதிகா வருத்தத்துடன் அழுகிறார். இதனிடையே, கோபி மாட்டிக்கொண்டார், கோபி மாமா நிலைமை கவலைக்கிடம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே அப்பாவிடம் மாட்டிக் கொண்ட அவர் தற்போது ராதிகாவிடமும் மாட்டி இருக்கிறார். அடுத்து கதையில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம். ராதிகா சீரியலில் புதிய வில்லியாக உருவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.