மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3 ரூபாய் குறைப்பு – தேர்தல் எதிரொலி!
பஞ்சாப் மாநிலத்தில் 2022ம் ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வீட்டு உபயோக நுகர்வோருக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.3 வரை குறைப்பதாக அமைச்சரவை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின் கட்டணம் குறைப்பு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் LPG கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்வுக்கு மத்தியில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. அந்த வகையில் நேற்று (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ள பஞ்சாப் அமைச்சரவை, வீட்டு உபயோக நுகர்வோருக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.3 வரை குறைக்க முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் வெளியான இந்த அறிவிப்பால் அரசின் கருவூலத்துக்கு ரூ.3,316 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.8 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு!
தற்போது நடைபெற்று முடிந்துள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் மாநிலத்தில் வீட்டு நுகர்வோருக்கான மின்சார உபயோகத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.3 கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்களின்படி, 100 யூனிட்கள் வரையிலான மின்சாரம் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.1.19 ஆக இருக்கும். இந்த விலை முன்பு ரூ.4.19 ஆக இருந்தது.
இதைத்தொடர்ந்து 100 முதல் 300 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.7 ஆக இருந்த விலை இப்போது ரூ.4 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 300க்கும் மேற்பட்ட யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த முடிவு பஞ்சாப் மாநிலத்தில் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்துக்கு வருகை தந்துள்ளார்.
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு & பணிகள் – முழு விபரம் இதோ!
மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, பஞ்சாபில் புதிதாக பதவியேற்ற முதல்வர் சன்னி மாநில மக்களின் நம்பிக்கையை பெற மின்சாரத்தை மலிவாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டண குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.