தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு சம்பளம் – முதல்வர் கடிதம்!
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூபாய் 1178.12 கோடி தொகையினை உடனடியாக வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் கடிதம்:
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 100 நாட்கள் வேலை வழங்கும் உத்திரவாதத்தை இத்திட்டம் அளிக்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் பயன் பெறுகின்றனர். கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் 100 வேலை திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு வேலை அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் ஓய்வூதியம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நிதியமைச்சர் பேட்டி!
இந்த நிலையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து எடுத்துரைத்து, உடனடியாக நிலுவைத் தொகையினை மாநிலத்திற்கு விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.3524.69 கோடி 15.09.2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
Wipro நிறுவனத்தின் சூப்பர் திட்டம் – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! முழு விவரம் இதோ!
இதனால் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்கள் பயனடைந்தனர். அதற்கடுத்து 1.11. 2021ம் தேதி வரை தொழிலாளர்களுக்கு 1178.12 கோடி ரூபாய் ஊதியம் தரப்படாமல் நிலுவையில் உள்ளது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஊதியம் வழங்கப்படாததால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பண்டிகை காலத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தினை வழங்கிட நிதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.