சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி – தேவசம் போர்டு அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சபரிமலை கோவில்:
நாடு முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவும் விகிதம் படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதில் கேரள மாநிலம் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இரவு ஊரடங்கில் 1 மணி நேரம் தளர்வு, திரையரங்குகளில் 50% அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
எனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் என்.வாசு அவர்கள், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த மாதம் நாளொன்றுக்கு 25 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்தோம் என கூறியுள்ளார். மேலும் வரும் நவம்பர் 16ம் தேதி முதல், கார்த்திகை மாதத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றும் அப்படி வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் – அரசாணை வெளியீடு!
கொரோனா காரணமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை விலக்கி, நவம்பர் 16ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய அவர் கார்த்திகை மாதத்தில் இருந்து சன்னிதானத்தில் அபிஷேகம் செய்வதற்கான நெய்யை பக்தர்கள் நேரடியாக வழங்கலாம். பக்தர்கள் தங்குவதற்கு வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். அதேபோல் பம்பாய் வரை போக்குவரத்துக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.