3 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – சீன அரசு!
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி:
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் விரைவாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாமல் சீன அரசு திணறியது. ஊரடங்குகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. தற்காலிக மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கே பரவியது.
தற்காலிக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000 ஆக உயர்வு – முதல்வர் உத்தரவு!
தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியாக கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவத்துறை இறங்கியது. கடின உழைப்பின் பலனாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று பரவலில் இருந்து மக்களை காக்கிறது. சீனாவில் இதுவரை 223 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!
இதனால் தொற்று ஓரளவு குறைந்து நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் சீன அரசு தொற்று பரவல் அதிகம் உள்ள பல்வேறு இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்கும் முயற்சியாக சீன அரசு ஹூபெய், புஜியான், ஹெனான், ஷீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது