தமிழக அரசு மருத்துவமனைகளில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ‘லேப் டெக்னீசியன்’ நிலை 2 காலி பணியிடங்களை நிரப்ப கோரி டிப்ளமோ லேப் டெக்னீசியன்கள் சென்னை எம்.எஸ். வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி பாராமெடிகல் கவுன்சிலிங்கை விரைந்து நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஏராளமனோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாள்தோறும் அதிகரித்த தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தது. மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையும் நிலவியது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அரசு தற்காலிகமாக ஒப்பந்த ஊதிய அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்து பணியிடங்களை நிரப்பியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன் DA உயர்வுத்தொகை – மற்ற பலன்களுடன்!
தற்போது ஒப்பந்த அடிப்படையில் வெகு நாட்களாக வேலை செய்வபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து பரவி வரும் வைரஸ் தொற்று காலகட்டத்தில் லேப் டெக்னீஷியன்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ‘லேப் டெக்னீசியன்’ நிலை 2 காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி டிப்ளமோ லேப் டெக்னீசியன்கள் சென்னை .எம்.எஸ். வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் டெக்னீசியன்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வங்கி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது குறித்து பேசிய லேப் டெக்னீசியன் சங்கத்தின் தலைவர், அரசு மருத்துவ கல்லூரிகளில் லேப் டெக்னீசியன் படிப்பு முடித்தவர்கள் 20,000 பேர் ஆவர். லேப் டெக்னீசியன் இரண்டாம் நிலையில் பணி நியமனம் பெற்றவர் 524 பேர் மட்டுமே. எனவே தமிழகம் முழுவதும் காலியாக உள்ள லேப் டெக்னீசியன்கள் காலி பணியிடங்களை உடனே நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க பட வேண்டும். ‘லேப் டெக்னீசியன்’ நிலை 2 காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். மேலும் பாராமெடிக்கல் கவுன்சிலிங்கை விரைந்து முடிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.