‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கண்ணம்மாவாக ஜீ தமிழ் நடிகை? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகும் பட்சத்தில் இந்த சீரியலின் அடுத்த கண்ணம்மாவாக ஜீ தமிழ் சீரியல் நடிகை நக்ஷத்ரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய நடிகை
சமீபகாலமாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினியின் விலகல் தான். அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மா ரோலில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறாராம். நடிகை ரோஷினிக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதனால் கேரியரில் அடுத்த கட்டத்துக்கு நகரும் முடிவை அவர் எடுத்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
‘நீ பண்ணுனது துரோகம்’ ஸ்ருதியிடம் சண்டை போடும் தாமரைச்செல்வி – ‘பிக் பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!
என்றாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி விலகுவது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடிக்க இருப்பதாக பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் முதலாவதாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் நடிகை கேப்ரியல்லா, விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ நடிகை வைஷ்ணவி, ‘வேலைக்காரன்’ நடிகை கோமதி ப்ரியா ஆகியோரின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது.
தமிழ் சீரியல்களில் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – ரசிகர்கள் வாழ்த்து மழை!
இப்போது இந்த பட்டியலில் ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை நக்ஷத்ரா நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ‘யாரடி மோகினி’ சீரியலில் நடிகை நக்ஷத்ரா ஏற்கனவே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் என்பதால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க அவர் பொருத்தமாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இதனுடன் கண்ணம்மா கதாபாத்திரத்துக்கு ஏற்ற நிறம், குணம் ஆகியவற்றை இவர் பெற்றிருப்பதால் இந்த கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Super idea