LIC பாலிசிதாரர்களின் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்! மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்கள் பான் மற்றும் ஆதார் கார்டை பாலிசியுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை எவ்வாறு இணைப்பது என்பது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
LIC பாலிசி:
இந்தியாவில் முக்கியமான ஆவணமாக கருதப்படுவது PAN Card. தற்போது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளின் போது பான் கார்டு அவசியமாகிறது. இந்த பான் கார்டுகளை வருமான வரித்துறையினர் விநியோகித்து வருகின்றனர். 10 இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டானது வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளை குறைக்கவும் பயன்படுகிறது.
LTI நிறுவனத்தில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு – அடுத்த நிதியாண்டுக்குள் திட்டம்!
இந்த பான் கார்டினை எல்.ஐ.சி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து உள்ளவர்கள் ஆதார் கார்டு மற்றும் PAN Card ஐ பாலிசியுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து பான் கார்டை பாலிசியுடன் இணைக்க வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இது குறித்த எஸ்எம்எஸ் ஐ வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது இந்நிறுவனம். எனவே வாடிக்கையாளர்கள் எல்.ஐ.சி. வெப்சைட்டில் விவரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் அறிவிப்பின் படி https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/ என்ற இணையதளத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்க முடியும். வாடிக்கையாளர்கள் முதலில் வெப்சைட்டில் உள்நுழைய வேண்டும். அதன்பின் அதில் பெயர், பாலினம், பான் எண், மொபைல் நம்பர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதனை பூர்த்தி செய்த பின்னர் கேப்ட்சா குறியீட்டினை பதிவு செய்ய வேண்டும். பின்னர் Get OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் மொபைல் நம்பருக்கு வரும் OTP ஐ டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பான் கார்டை பாலிசியுடன் இணைத்துக்கொள்ளலாம்.