கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – டெபிட் கார்டை பிளாக் செய்யும் முறைகள்!
கனரா வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தொலைந்தால் எளிதாக வங்கியில் இருந்து புதிய கார்டு பெறலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கனரா வங்கி:
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் வங்கி சேவையை வழங்கியது. வங்கிகளின் அதிகாரபூர்வ இணையப்பக்கங்கள் மூலம் பண பரிமாற்றம் நடைபெற்றது. கொரோனா பரவும் சூழலில் மக்கள் முடிந்தளவு வங்கிக்கு வராமல் வீட்டில் இருந்து வங்கி தொடர்பான பணிகளை செய்ய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழக ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை – விசாரணை ஒத்திவைப்பு!
தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மையமாகி விட்டது. நாம் எங்கு என்றாலும் என்ன வாங்கினாலும் அதற்கு கையில் இருந்து பணம் கொடுக்க தேவையில்லை. டெபிட் கார்டு மூலம் நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடலாம். பணப்பரிமாற்றத்தில் டெபிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து வேலைகளுக்கும் டெபிட் கார்டை நாம் உபயோகபடுத்துகிறோம். அதனால் அது எப்போதும் நம் கைகளிலேயே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக டெபிட் கார்டு தொலைந்து போக கூட வாய்ப்புள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – ஓபிஎஸ் கோரிக்கை!
அப்போது நாம் முதலில் செய்ய வேண்டியது டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்று தனது வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி அறிவுறுத்தியுள்ளது. கனரா வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தொலைந்தால் உடனே 1800 425 0018 எண்னை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி கார்டை பிளாக் செய்ய வேண்டும். இல்லையெனில் வங்கி கிளைக்கு நேரடியாக சென்று உங்கள் டெபிட் கார்டின் 16 இலக்க எண்ணை கூறி கார்டை பிளாக் செய்யலாம். மேலும் கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு சென்று டெபிட் கார்டு ஆப்ஷனை தேர்ந்தெடுத்து பிளாக் செய்யலாம்.