தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – ஓபிஎஸ் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பொருளாதார நிதி நெருக்கடியின் காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை வழங்குமாறு அரசு ஊழியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு தங்களது ஊழியர்களுக்கு 17% ஆக இருந்த அகவிலைப்படியை முதலில் 28% ஆக உயர்த்தியது. பின்னர் தற்போது 31% ஆக உயர்த்தியுள்ளது. ஆனால் மாநில அரசு ஊழியர்களுக்கு அதே 17% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தீபாவளிக்கு அவர்களுக்கு போனஸாக வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் மக்களுக்கு உதவிடும் வகையில் செயல்படுகின்றவர்கள் அரசு ஊழியர்கள் தான்.
தீபாவளியை முன்னிட்டு 20 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில கல்வித்துறை உத்தரவு!
அவ்வாறு அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் எப்பொழுதெல்லாம் அகவிலைப்படியை அறிவிக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அதிமுக அரசு அறிவித்தது என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் 15,000 கோடி ரூபாய் செலவில் ஊதியக் குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தையும் உயர்த்திய அரசு அதிமுக அரசு என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறாக அதிமுக ஆட்சியில் அவர்கள் செய்த பல்வேறு நலத்திட்டங்களை அவர் கூறியுள்ளார். மாணவர்களுக்கு கல்வி கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள் அதாவது, வருங்கால இந்தியாவையே உருவாக்குபவர்கள் என்றே சொல்லலாம். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது அரசின் கடைமை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் கவனத்திற்கு – சிமெண்ட் விலை ரூ.120 அதிகரிப்பு!
ஆனால் மாநில அரசு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை 2022 ஏப்.1ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கும், மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 14% வித்தியாசம் உள்ளது. திமுக தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்டும் வகையில் அகவிலைப்படி நிறுத்தி வைத்து பின்னர் கொடுப்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் வித்தியாசத்தில் உள்ள 14% அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி போனஸாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.