தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்வு – இன்றைய நிலவரம்!
அதனை தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200-க்கு கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழக அரசு – ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’!
எனவே வணிக நிறுவனங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை உறுதி செய்வது ஆகிய அரசு வழிகாட்டுதல்கள் முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.