ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு – அக்.22 கடைசி நாள்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இன்று பதவியேற்காதவர்கள் அக்-22 ம் தேதி பதவி ஏற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பதவி ஏற்பு:
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இது தொடர்பாக கூடிய விரைவில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த அக்-6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000? அரசுக்கு கோரிக்கை!
அதற்கான முடிவுகள் கடந்த அக்-12 ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அக்-22ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்கள் போன்ற பதிவுகளுக்கு இன்று பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.
இன்று முதல் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு? வெளியான தகவல்!
அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு பிரமாண நிகழ்வு நடைபெற்று வருகிறது. அவ்வாறு இன்று பதவியேற்றுக் கொள்ளாதவர்கள் வரும் அக்-22ம் தேதி பதவியேற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பதவி ஏற்காதவர்கள் பதவி ஏற்க வரும்போது மறைமுகத் தேர்தலில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதவி ஏற்காதவர்கள் மறைமுக தேர்தலில் கலந்து கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.