இன்று முதல் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு? வெளியான தகவல்!
பண்டிகை கால நேரங்களை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை இன்று (அக்.20) வரை தளர்த்தி இருந்தது. இந்நிலையில் மீண்டுமாக அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொடர்புடைய கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சில மாநிலங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 20 வரையும் பண்டிகை நாட்களை கருத்தில் கொண்டு வாகனங்கள் மற்றும் மக்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை!
இந்த தளர்வுகள் அனைத்தும் இன்றுடன் (அக்.20) முடிவுக்கு வருவதால் இன்று இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் எச்.கே. திவேதி அனைத்து மாவட்ட நீதிபதிகளுடனான சந்திப்பின் போது, மாநிலம் முழுவதும் கடுமையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – CITU வலியுறுத்தல்!
இதனுடன் அம்மாநிலத்தில் இரவு நேர கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய தளர்வுகள் குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால், அது நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அனைத்து உள்ளீடுகளின் அடிப்படையில் முதல்வர் இறுதி முடிவை எடுப்பார் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த தகவலை வைத்து பார்க்கும் போது மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரையும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.