தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000? அரசுக்கு கோரிக்கை!
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டம் தமிழகத்திலும் கொண்டு வரப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இழப்பீடுத் தொகை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை விரைவாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தது. இரண்டாம் கொரோனா அலையால் வயதானவர்களும், இணை நோய்கள் உள்ளவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதிகரித்த உயிரிழப்புகளால் ஏராளமானோர் குடும்பத்தினரும், தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்து கவலை அடைந்தனர்.
இன்று முதல் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு? வெளியான தகவல்!
குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரை கொரோனாவால் இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவால் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்தவர்களுக்கு அரசு நிவாரண நிதிகளை அறிவித்தது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு நெருக்கடியை போக்கும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை!
இந்த அறிவிப்புக்கு கேரள மக்களும் மற்ற மாநிலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் கேரள அரசின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் கொரோனா தொற்றால் வருமானம் ஈட்டும் குடும்ப நபரை இழந்த தமிழ் மக்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக தலைமையிலான அரசு கேரள அரசு அறிவித்துள்ள திட்டத்தையும் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.