தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14,15,16,17 ஆகிய 4 தினங்களும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுமுறை :
தமிழகத்தில் அக்டோபர் 14 , 15 ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 16ம் தேதி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா சற்று குறைந்த வந்த நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
வெகு நாட்களுக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமைதோறும் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் அக்டோபர் 14 (வெள்ளிக்கிழமை) ஆயுத பூஜை, அக்டோபர் 15 (விஜயதசமி) ஆகிய நாட்களில் விடுமுறையை முன்னிட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வர் அதனால் பண்டிகை தினத்திற்கு மறுநாள் சனிக்கிழமை மாணவர்கள் வருகை கணிசமாக குறையும் என்று கொரோனா அச்சத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவித்து வருகின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – முதியோர்களுக்கு மாற்று ஏற்பாடு!
இதனால் தொடர் விடுமுறையாக அக்டோபர் 16 தேதி அன்றும் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியா்களின் நலன் கருதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.