சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. ஆனால் கொரோனா காலகட்டங்களில் பொருளாதார ரீதியாக அனைவரும் பின்தங்கியிருந்ததால் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தது. அதனால் கொரோனா காலகட்டத்தில் தங்கத்தின் விலையானது 32 ஆயிரம் அளவில் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அப்போது மக்கள் பொருளாதார நெருக்கடியில் தவித்திருந்ததால் நகைகள் வாகமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதனால் மக்கள் பங்கு சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு முதலீடு அதிகரிப்பதன் விளைவாகவே தங்கத்தின் விலை நாளுக்கு நாள் என்பது மாறி ஒரு நாளில் காலை, மாலை என இருநேரங்களிலும் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – முதியோர்களுக்கு மாற்று ஏற்பாடு!
இதனால் சாமானிய மக்கள் தங்க நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. பெண்களில் நகையை விரும்பாதவர்கள் என்று எவரும் இருக்க முடியாது. மேலும் தற்போது ஆண்களும் பெரும்பாலும் தங்கத்தினாலான நகைகளை விரும்பி வருகின்றனர். இதனாலும் நகை விலை அதிகரிக்கிறது என்றும் கூறலாம். அதிலும் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அதேபோல, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.4505 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.66.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் தற்போது தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றனர். இந்த நேரத்தில் தங்கநகை விலை அதிகரிப்பது நகை பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் திருமண முகூர்த்தங்கள் கூடி வருவதால் சாமானிய மக்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.