தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – முதியோர்களுக்கு மாற்று ஏற்பாடு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவிடுவதில் முதியோர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்கான மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
பயோமெட்ரிக் முறை:
நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் இருந்து ரேஷனில் வழங்கும் மானிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்தகைய திட்டம் பிரதமர் மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்கும் செயல்முறை நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் ஆதார் எண் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டு பயோமெட்ரிக் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஸ்மார்ட் கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!
அதனை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருள்களை வழங்குவது அடிப்படையில் இத்தகைய ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முறையே தற்போது பயோமெட்ரிக் முறை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கோவையில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற, கைரேகையை பதிவு செய்வதில் முதியோர் சிரமத்தை எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளதால் தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய பயோமெட்ரிக் முறையில் இளைஞர்கள், நடுத்தர வயதினருக்கு சிரமம் ஏதும் இல்லை. இவ்வாறு முதியவர்களுக்கு கைரேகை பதிவாகவில்லை என்றால் காத்திருக்கும் படி ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் 3 முறைக்கு மேல் பதிவாகவில்லை என்றால் நாளை வருமாறு கூறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
அக்.31 வரை தினசரி 5 மணிநேரம் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இதனை தடுக்கும் விதமாக கைரேகை பதிவாகாத முதியவர்கள் தங்களது ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உறுப்பினராக உள்ள மற்றவர்களை அனுப்பி கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை பெற எந்த தடையும் இல்லை. மேலும், தொடர்புடைய முதியவர் தனக்கு பதிலாக தெரிந்த ஒரு நபரை பிரதிநிதியாக குறிப்பிட்டு, அவரிடம் பொருட்களை வழங்க அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான படிவத்தை நியாய விலைக் கடைகளிலேயே பெற்று பூர்த்தி செய்து அளித்தால் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆய்வு நடத்திய பின்னர் அனுமதி அளிக்கப்படும். பின்னர் அந்த நபர் கடைக்கு வந்து ‘ஆஃப் லைன்’ முறையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இதுபோல படிவம் அளித்துள்ளனர் என்று அம்மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி கூறியுள்ளார்.