இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021 மூவருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!
உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகளை பெறும் இந்த ஆண்டுக்கான விஞ்ஞானிகளின் பட்டியலில் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இயற்பியல் துறைகளுக்கான விருதுகள் 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 முக்கியமான துறைகளுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் நேற்று (அக்.4) முதல் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக விருது பெறும் துறைகளில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற அறிவியல் சார்ந்த துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் வைத்தும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.
தமிழகத்தில் 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வங்கியாளர் குழுமம் அறிவிப்பு!
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பெறுவோரின் பட்டியல் நேற்று (அக்.4) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் நாளுக்கான நோபல் பரிசு, உலகளவில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கிய டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் பட்டபோர்ஷியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
WhatsApp நிறுவனத்தின் சூப்பர் அப்டேட் – பயனர்களுக்கு கூடுதல் வசதி! தவறாமல் படிங்க!
இதை தொடர்ந்து இன்றைய (அக்.5) நாளுக்கான நோபல் பரிசு, இயற்பியல் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 2021ம் ஆண்டுகான இயற்பியல் துறை நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.