திருச்செந்தூரில் நாளை (அக்.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நாளை (அக்டோபர் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல மாதங்களாக மின்துறையில் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் மின்வாரியம் சார்பில் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் நண்பகல் வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நுகர்வோரின் மின் தொடர்பான புகார்களை அளிக்க மின்னகம் அமைக்கப்பட்டு இலவச உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘இனி’ சம்பளம் கிடையாது – லஞ்சம், போக்சோ வழக்குகளில் சிக்கினால்!
இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி (நாளை) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மணப்பாடு, குலசை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள் செய்திக் குறிப்பினை வெளியிட்டு உள்ளார். அதன்படி, குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் கல்லாமொழி துணைமின் நிலையத்தில் இருந்து மணப்பாடு செல்லும் பாதையில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
இதனால் நாளை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை,
- மணப்பாடு
- சிறுநாடார் குடியிருப்பு
- குலசேகரப்பட்டினம்
ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் முன்கூட்டியே பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.