இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு இணையதளம் – மத்திய அரசு ஏற்பாடு!
நாட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை வழங்கும் இணையதளம் ஒன்றை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.
வேலைவாய்ப்பு:
அரசு அறிக்கையின்படி, இந்தியா நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 76 லட்சம் மூத்த குடிமக்கள் இருந்தனர். அதுவே, கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது 10.4 கோடியாக அதிகரித்தது. ஆனால் தற்போது 13.3 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மத்திய அமைச்சகம், ஒரு அதிகாரபூர்வ அறிக்கையின் படி சிஐஐ, எஃப்ஐசிசிஐ, அசோசாம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வேலை செய்ய விரும்பும் மூத்த குடிமக்களுக்கு வேலை வழங்கி உதவுமாறு வலியுறுத்தியுள்ளது.
அக்.1 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு தகுந்த வேலை கிடைக்க ‘ரோஸ்கர் எக்ஸ்சேஞ்ச்’ என்று அழைக்கப்படும் ஒரு இணையதளத்தை தயாரித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான மறு வேலைவாய்ப்புக்கான கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உருவாக்கிய தளத்தின் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை விவாதிக்க முடியும். மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம், சட்ட சிக்கல்கள், ஆதரவு, துன்புறுத்தலுக்கு எதிரான உதவி மற்றும் வீடற்றவர்களுக்கு உதவுதல் போன்றவற்றுக்காக நாடு முழுவதும் 14567 என்ற கட்டணமில்லா அவசர கால எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்.1) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
60 வயதிற்கு மேற்பட்ட வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள், தங்கள் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை பதிவு செய்து தேடலாம். பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் தங்கள் கல்வி, அனுபவம், திறன்கள், ஆர்வங்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். ஆயினும், மத்திய அரசு 100 % வேலைக்கு உத்தரவாதம் அளிக்காது. இது நிறுவனங்களைப் பொறுத்தது. மூத்த குடிமக்களுக்கு அவர்கள் தகுதியின் அடிப்படையில் வேலை கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.