தமிழக பள்ளிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளி வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
வேலை நாட்கள்:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் கட்டமாக 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 1 முதல் 8 வரை உள்ள மாணவர்களும் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு நவம்பர் 1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
நவ.1ம் தேதி நர்சரி முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அனுமதி!
ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் சுத்தம் செய்தல் பணிகளுக்காக பள்ளிகளுக்கு ஓரிரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய அதிகாரிகளும், பட்டதாரி ஆசிரியர்களும் பங்கு பெற்றனர். இக்கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தி நிறைவேற்றி தர வேண்டும் என்றனர்.
SBI வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம் – வட்டி விகிதம், நன்மைகள் விளக்கம்!
மேலும் என்எம்எம்எஸ் மற்றும் என்டிஎஸ் போன்ற தேர்வுகளின் அறை கண்காணிப்பாளர் பணிகளுக்கு ஒரே ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்தி விட்டு அனைத்து ஆசிரியர்களையும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும். பள்ளிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கழகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கண்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.