நவ.1ம் தேதி நர்சரி முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அனுமதி!
டெல்லியில் நிலவி வரும் கொரோனா தொற்று சூழலை ஆய்வு செய்த அரசு, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நர்சரியில் இருந்து 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டுமாக திறக்க அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்து வரவிருக்கும் பண்டிகை காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் இன்று (செப்.29) முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், நவம்பர் 1ம் தேதி முதல் நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு கிடையாது? அரசுக்கு புதிய கோரிக்கை!
இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டெல்லியில் நவம்பர் 1 முதல் நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தசரா மற்றும் துர்கா பூஜையை கடைப்பிடிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு அமைத்துள்ளது. டெல்லியில், தற்போதுள்ள கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளுடன் பூஜையை கடைபிடிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆவணங்கள் இன்றி ஒரே நாளில் 1 லட்ச ரூபாய் பெறலாம்!
இதற்கு முன்னதாக டெல்லியில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து நேரடி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய கல்வித்துறை, மீதமுள்ள வகுப்புகளை மீண்டும் திறப்பதில் உள்ள அபாயங்கள் குறித்த கருத்துக்களையும் கேட்டறிந்து, நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. அந்த வகையில் தசரா பண்டிகைக்கு பிறகு படிப்படியாக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறைகள் முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.