EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆவணங்கள் இன்றி ஒரே நாளில் 1 லட்ச ரூபாய் பெறலாம்!
பிஎஃப் சேமிப்பு வைத்துள்ள ஊழியர்கள் எந்தவித ஆவணமும் இன்றி 1 லட்சம் வரையிலான தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று EPFO புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
EPFO அறிவிப்பு:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என பணியாற்றி வரும் அனைத்து பணியாளர்களும் தங்களது வருமானத்தின் ஒரு பாதியை பிஎஃப்பில் சேமித்து வருகின்றனர். ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் சேமிக்கப்பட்ட தொகை பெரும் உதவியாக இருக்கும் என்பதால் தற்போது அனைத்து ஊழியர்களும் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் எந்தவித ஆவணங்களும் இன்றி 1 லட்ச ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று EPFO புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அட்வான்ஸ் 1 லட்சத்திற்கும் அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ப்ராசஸ் உடனே மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
தமிழக அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பழகுநா் சோ்க்கை – ஆட்சியர் அறிவிப்பு!
கொரோனா போன்ற உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் நோய்ப் பாதிப்பால் மருத்துவமனைகளில் அவசரமாக அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவமனையில் ஆகும் செலவை மதிப்பிட முடியாது. இதனால் இந்த அட்வான்ஸ் உடனடி தொகை உதவியாக இருக்கும் என ஊழியர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு EPFO இந்த புதிய முறையை நடைமுறைபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இத்தைகைய தொகையானது ஊழியர் கேட்கும் அந்நாளிலே வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நோயாளியின் விவரம் மற்றும் மருத்துவமனையின் விவரத்தைச் செலவாகும் மதிப்பீட்டுத் தொகை குறிப்பிடாமல் அந்நபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – விலை குறைந்த ரீசார்ஜ் திட்டம்!
பணம் செலுத்தப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நபர் 45 நாளுக்குள் பில்களை சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருக்கும் தொகையை வைத்து மருத்துவ உதவித் தொகையுடன் இறுதிக்கட்ட பில் சரிசெய்து வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தகைய அறிவிப்பினை ஊழியர்கள் வரவேற்கின்றனர்.