தமிழகத்தில் பெண்களுக்கான இலவச அரசு பேருந்து பயணம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் இதுவரை 26 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இலவச பேருந்து பயணம் :
தமிழகத்தில் திமுகவினர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றனர். அதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் போது முக ஸ்டாலின் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதில் ஒன்றான அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற வாக்குறுதியை ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றினர். இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற ,மாநிலங்களுக்கும் இந்த திட்டம் ஒரு முன்னோடியாக உள்ளது.
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை – அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!!
மேலும் இந்த திட்டத்தால் அரசு நகரப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரக்கோணத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பேருந்து இலவச பயண திட்டத்தின் கீழ் இதுவரை 26 கோடி பெண்கள் பயன் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக போக்குவரத்து துறைக்கு 1,450 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
CBSE துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? மதிப்பெண்களை அறிந்து கொள்ளும் வழிமுறைகள்!
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், கொரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கையாக 1 லட்சம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் தயாராக உள்ளது. அதேபோல் ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. ஏழை மக்களின் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்த முதல்வர் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.