இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை – அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!!
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
விமான தடை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்த காரணத்தால் அனைத்து மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் பல கட்டுப்பாடுகளையும் ஊரடங்கயும் அறிவித்தது. இந்த ஊரடங்கால் மக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளில் முடங்கினர். இந்தியாவில் மஹாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் இரு மடங்காக அதிகரித்த நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது.
CBSE துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? மதிப்பெண்களை அறிந்து கொள்ளும் வழிமுறைகள்!
போதிய அளவும் மருத்துகள் மருத்துவ ஆக்ஜிசன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்ல மாநில அரசுகள் தடையை அறிவித்தது. மேலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து சேவையும் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் பல்வேறு நாடுகள் நோய் பரவும் அச்சத்தால் இந்திய விமானங்களுக்கு தடையை அறிவித்தது. அதே போல இந்தியாவும் சர்வதேச பயணிகள் விமான சேவையை ரத்து செய்தது.
தமிழக பள்ளி மாணவர்கள் பாடத்திட்டத்தில் புதிய அறிமுகம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
தற்போது வரை பாதிப்புகள் குறையாத காரணத்தால் இந்தியாவில் சர்வதேச விமான தொடர்ந்து தடையை நீட்டித்து வருகிறது. இந்த தடையானது அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். சரக்கு விமான போக்குவரத்து வழக்கம் போல் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.