பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – CERT எச்சரிக்கை!
ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மோசடி நபர்களால் பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து CERT எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டேட் வங்கி:
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர்கள் அதிக பணத்தை இழப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஊரடங்கு காலத்தில் போது ஆன்லைன் பண பரிமாற்றத்தின் மூலம் போலி இணையதளங்ளை நம்பி வாடிக்கையாளர்கள் ஏமாந்துள்ளனர். ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் 65,000 ரூபாயும் மற்றொரு வாடிக்கையாளர் 40,000 ரூபாயும் , மற்றொருவர் 38,000 ரூபாயையும் இழந்துள்ளனர் என்று புகாரளித்துள்ளனர். புகாரளித்தவர்கள் தங்களின் ஏடிஎம் கார்டு எண்கள் OTP எண்கள் போன்றவற்றை யாரிடமும் சேர் செய்யவில்லை.
பாரத் பந்த் எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு விவரம்!
இந்த அனைத்து மோசடிகளின் செயல்பாடுகளும் ஒரு ஒற்றுமையைக் கொண்டுள்ளன என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பண மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் புகாரளிக்கும் போது கடந்த இரண்டு நாட்களாக SBI YONO ஆன்லைன் விண்ணப்பத்தை என்னால் அணுக முடியவில்லை. வீடு கட்டுவதற்கான கடன் தொகையின் ஒரு பகுதி இரண்டு நாட்களுக்கு முன்பு எனது கணக்கிற்கு மாற்றப்பட்டதால், மீதியை சரிபார்க்க முடிவதில்லை கடந்த சனிக்கிழமையன்று எனது தொலைபேசியில் பல OTP எண்களை பெற்றேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரனுக்கு ரூ.104 வீழ்ச்சி!
38,000 ஐ இழந்த வாடிக்கையாளரும், ஒரு இணைப்பைப் கிளிக் செய்து அதில் தனது பான் எண்ணை வழங்கியதன் மூலம் பணத்தை இழந்துள்ளார். இது போன்ற இணைய வழி தாக்குதல்களை எதிர்க்க இந்திய கணினி அவசரப் பதில் குழு (CERT) இந்தியாவில் ஒரு புதிய ஃபிஷிங் தாக்குதலைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் வங்கி வாடிக்கையாளர்களை குறிவைப்பதாக சமீபத்தில் எச்சரித்திருந்தது கடந்த மாதம் CERT வழங்கிய ஆலோசனையின் படி ஷிங் வலைத்தளங்களை நடத்த ஒரு தவறான பயன்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.