விரைவில் முடிவுக்கு வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் – அடுத்தடுத்த திருப்பங்கள்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தொடர்ந்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது. அதனால் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சீசன் 2 பற்றியும் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவி TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து பாரதி கண்ணம்மா சீரியல் சாதனை படைத்துள்ளது. பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் இடையே பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதால் எப்போது தான் இருவரும் சேரப் போகிறார்கள் என எதிர்பார்த்து ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல கடந்த 2 வாரங்களாக பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. முதலில் அஞ்சலியின் வளைகாப்பில் வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையை அஞ்சலி சொல்கிறார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் செம ட்விஸ்ட் – செண்பகத்தை கோவிலுக்கு கூட்டி செல்லும் கல்பனா!
அதற்கு முன்னதாக கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை தான் என்ற உண்மையை மருத்துவர் சொல்லி விடுகிறார். அதனால் ஹேமா தன்னை போலவே இருப்பதால் அவள் தான் தன்னுடைய மகளாக இருப்பாளோ என்ற எண்ணம் கண்ணம்மாவிற்கு வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என சௌந்தர்யா பொய் சொல்கிறார். மறுபக்கம், வெண்பா கண்ணம்மாவிடம் இரட்டை குழந்தை பற்றி தெரியும் என சொல்லி பாரதியை விவாகரத்து செய்ய சொல்கிறார்.
கண்ணம்மாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி – ஆப் ஸ்கிரீன் வைரல் புகைப்படம்!
மேலும் இதுவரை ஹேமா பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது அஞ்சலிக்கு உண்மை தெரிந்துள்ளது. அது போல 8 வருடங்களுக்கு பின்னர் பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசன் தொடங்க இருப்பதாக ரசிகர்கள் எடிட் செய்த ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்றைய ப்ரோமோவில் வேணுவிற்கு நெஞ்சுவலி வர கண்ணம்மா பாரதி சேர்ந்து வாழ வேண்டும் என சத்தியம் வாங்குகிறார். அதை வைத்து பார்க்கும் போது சீரியல் விரைவில் முடிய இருப்பது போல தான் தெரிகிறது.