கண்ணம்மாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி – ஆப் ஸ்கிரீன் வைரல் புகைப்படம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியாகவும், கண்ணம்மாவாகவும் நடித்து வரும் அருண் பிரசாந்த், ரோஷினி ஆப் ஸ்க்ரீனில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. பலரின் மனம் கவர்ந்த இந்த சீரியல், தற்போது 600 எபிசோட்களை கடந்துள்ளது. இருந்தாலும் மக்கள் மனம் கவர்ந்த சீரியலாக இந்த சீரியல் இருக்கிறது. மலையாளத்தில் கருத்த முத்து என்ற பெயரில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. கறுப்பாக இருப்பதால் பல்வேறு சித்தி கொடுமைக்கு ஆளாகும் கண்ணம்மா மீது டாக்டரான பாரதி காதல் கொள்கிறார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விரைவில் திருமணம்? திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!
குடும்பத்தை எதிர்த்து நடக்கும் இவர்களின் திருமணத்தை ஏற்க மறுக்கிறாள் பாரதியின் அம்மா செளந்தர்யா. கறுப்பாக இருப்பது, படிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி ஆரம்பத்தில் கண்ணம்மாவை வெறுக்கிறாள் செளந்தர்யா. அதன் பின் கண்ணம்மா கர்ப்பமாகிறாள். ஆனால் பாரதி கல்லூரி படிக்கும் போது காதலிக்கும் வெண்பா பாரதிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என சொல்லி நம்ப வைத்து கண்ணம்மா மீது சந்தேகத்தை வளர்கிறார். அதனால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ஊர் ஊராக சுற்றித் திரியும் கண்ணம்மாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். இதை தெரிந்து கொள்ளும் செளந்தர்யா, ஒரு குழந்தையை கண்ணம்மாவிற்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள்.
வருண் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் மல்லிகா? அத்தை போடும் திட்டம் – வெளியான ப்ரோமோ!
தத்தெடுத்த குழந்தை எனக்கூறி பாரதியிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள். ஹேமா தனக்கு பிறந்த குழந்தை என தெரியாமலேயே பாசத்தை பொழிகிறான் பாரதி. மற்றொரு குழந்தையான லட்சுமி, கண்ணம்மாவிடம் வளர்க்கிறாள். இந்நிலையில் பல்வேறு திருப்பங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா ஜோடிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு, அந்த கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி, அருண் ஆப் ஸ்கிரீன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கண்ணம்மா மாடல் உடையில் செம அழகாக இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் குவித்து வருகின்றனர்.