ஜீ தமிழ் ரவுடி பேபி சத்யா சீரியலில் ஜெயித்த ரகசியம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடித்து கருத்து வேறுபாட்டினால் அங்கிருந்து விலகி, ஜீ தமிழில் ரவுடி பேபியாக கலக்கி வரும் ஆயிஷாவின் கடந்து வந்த பாதையை பற்றி இந்த பதிவில் காண்போம்.
ரவுடி பேபி ஆயிஷா:
வெள்ளித்திரையின் ஹீரோயின்களை விட அதிக ரசிகர்களை தற்போதுள்ள சீரியல் நடிகைகள் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பெரிய வெற்றியை பெற்றுள்ளவர் நடிகை ஆயிஷா. இவர் ஆரம்பத்தில் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானதாக இருந்தாலும் அதன்பிறகு இவர் அடைந்துள்ள வெற்றியை யாராலும் மறுக்க முடியாது. கேரளாவை சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது விடாமுயற்சியினால் இந்த உயரத்தை அடைந்துள்ளார்.
IPL 2021, RCB vs CSK LIVE Updates: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி!
இவர் முதலில் விஜய் டிவியின் போன் மகள் வந்தால் சீரியலில் நடிகர் கவுதமிற்கு ஜோடியாக களம் இறங்கினார். முதலில் அவ்வளவு வரவேற்ப்பை பெறாத நிலையில், கதையின் மறுப்பதினால் மெல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சீரியல் இயக்குனருடன் ஆயிஷாவிற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் சீரியலில் இருந்து விலகப்பட்டார். அதன்பிறகு, பல இயக்குனர்களும் ஆயிஷாவை தவிர்த்து வந்தனர். அப்போது, தான் சன்டிவியில் மாயா தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடரில் இருந்து ஆயிஷா கவனம் பெற்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்பிறகு, ஜீ தமிழின் சத்யா தொடரில், ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த லோக்கல் கதாபாத்திரத்தில் டாம்பாய் ஆக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக விஷ்ணு நடிக்கிறார். அவரை அந்த தொடரில் ரவுடி பேபி என்று அழைக்கும் படி கதை அமைந்திருக்கும். சீரியல் ஹிட்டினால் அந்த பெயரை சொல்லியே அவரை அழைக்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு சீரியல் பிரபலமாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், ஹீரோவுடன் காதல் பஞ்சாயத்து வேறு. ஆனால் அனைத்தையும் கடந்து தற்போது ரவுடி பேபி ஆக அனைவர் மனதிலும் நிற்கிறார் ஆயிஷா. இந்த உயரத்திற்கு அவர் எளிதில் வந்துவிடவில்லை. இவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இந்த வெற்றியினால் மறந்து விட்டதாக ஆயிஷா தெரிவித்துள்ளார்.