TN TRB தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – வயது வரம்பை உயர்த்த பரிசீலனை!
கோவையில் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
ஆலோசனை கூட்டம்:
கோவையில் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது கொரோனா காலம் என்பதால் தனியார் பள்ளிகள் நடத்துவதில் சிரமம் இருப்பதாகவும், வேலையில்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் உதவுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அக்டோபர் 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம் – மாநில அரசு ஆதரவு!
6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கொரோனா 2ம் அலையை தொடர்ந்து நோய்த்தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
IT நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் – அதிகளவு சம்பள உயர்வு! ஆய்வில் தகவல்!
பெற்றோர் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை என்றும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் தேவை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.