அக்டோபர் 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம் – மாநில அரசு ஆதரவு!
இந்தியாவில் வரும் 27ம் தேதி விவசாயிகள் நடத்தவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கேரள அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
முழு அடைப்பு போராட்டம்:
இந்தியாவில் மத்திய அரசு கடந்த வருடம் விவசாயிகளுக்காக புதிய வேளாண் சட்டங்களை அறிவித்தது. இந்த சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத விவசாயிகள் அதனை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கலைக்க மத்திய அரசு விசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் இணங்கவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த வருட நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
IT நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் – அதிகளவு சம்பள உயர்வு! ஆய்வில் தகவல்!
3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். இந்த சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பந்த் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநிலங்களிடம் விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
செப்.27 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் கேரளாவிலும் வருகிற 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. அதன்படி 27ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 100 அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. கேரளாவில் அக்டோபர் 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.