விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் பார்வையாளர்களுக்கு அனுமதி? ஆனால் ‘இது’ கட்டாயம்!
விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த சீசனில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த சீசனில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
தமிழ் தொலைக்காட்சிகளில் சர்வதேச நிகழ்ச்சிகள் நம்மூர் ஸ்டைலில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளன. அதில் முதல் படியாக பிக்பாஸ் நிகழ்ச்சி 4 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் சனி, ஞாயிற்று கிழமைகளில் மக்கள் நேரடியாக கமலை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அக். 1 முதல் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை – ஜிப்மர் அறிவிப்பு!
இந்நிலையில் இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் 4 ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதில் கமல் மாறுபட்ட கான்செப்டில் ப்ரோமோவில் நடித்துள்ளார். இறுதியாக வெளியான ப்ரோமோவில், வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியாளர்களும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்ட வழிகாட்டுதல்கள் – வெளியீடு!
தற்போது இந்த ஆண்டு பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பார்வையாளர்களுக்கு நேரடியாக நிகழ்ச்சியை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் 5வது சீசனில் பார்வையாளர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக தெரிகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றுவதுடன், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.