அக். 1 முதல் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை – ஜிப்மர் அறிவிப்பு!
புதுவையில் அக்டோபர் 1 முதல் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என ஜிப்மர் அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை:
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கில் மருத்துவர்களும், ஊழியர்களும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் 21 ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சை தொடங்கப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்ட வழிகாட்டுதல்கள் – வெளியீடு!
தற்போது ஒரு நாளைக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஜிப்மர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, மருத்துவருடன் கலந்தாலோசனை செய்த பிறகு தான் அனுமதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா 2ம் அலை பரவும் விகிதம் குறைந்த நிலையில் ஜிப்மரில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு இலவச சிகிச்சை தருகிறோம். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் சிகிச்சை தர உள்ளோம். இனி அனைவரும் சிவப்பு ரேஷன் கார்டுகளை காண்பித்தால் மட்டுமே இலவச சிகிச்சை தர வேண்டும். இது அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அனைத்துத் துறைகளுக்கும் ஜிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – மாணவர்கள் எதிர்பார்ப்பு!
அதனை தொடர்ந்து ஜிப்மர் மக்களிடம் இருந்து தற்போது விலகிச் செல்கிறது. பல ஏழைகளிடம் சிவப்பு ரேஷன் கார்டு தற்போது இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்து வருவாய் அதிகாரிகளிடம் வருமானச் சான்று வாங்கித் தந்து சிகிச்சை பெறுகிறோம். சிவப்பு நிற ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை என்றால் பல ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். புதுச்சேரியில் சிவப்பு, மஞ்சள் ரேஷன் கார்டுகள் கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளனர். புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ளோரை அலைக்கழிக்கும் ஜிப்மர், நாடு முழுவதும் உள்ளோருக்கு எப்படி சிகிச்சை தரும்? அரசு அதிகாரிகளோ, அரசில் உயர் பதவிகளில் இருப்போரோ, பணக்காரர்களா ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள்? என பொதுமக்கள் சார்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.