வரதட்சணை பெற்றால், கொடுத்தால் பட்டம் ரத்து – பல்கலை அதிரடி உத்தரவு!
கேரளாவில் வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை:
பெண்களுக்கு திருமணம் ஆகும் பொது தாய் வீட்டின் சார்பில் நகை, பணம், பொருட்கள் என கொடுத்து அனுப்புவது அக்காலம் முதல் இக்காலம் வரை ஒரு பண்பாடாக இருந்து வருகிறது. இவை காலப்போக்கில் கட்டாயம் என்ற நிலைக்கு வந்தது. ஒரு பெண் திருமணம் ஆனால் அம்மா வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி தான் வர வேண்டும் என்று கலாச்சாரம் மாறியது. இதனால் பெண் வீட்டார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தன்னால் இயலவில்லை என்றாலும் கடன் வாங்கியாவது வரதட்சணை கொடுத்து விடுகிறார்கள்.
காந்தி கிராம பல்கலையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி – செப்.27 நுழைவுத்தேர்வு!
ஒரு வேலை வரதட்சணை கொடுக்காமல் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் திருமணத்திற்கு பின்னர் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இது போன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் இலவச தரிசனம் துவக்கம் – செப்.25 முதல் ஆன்லைன் டிக்கெட் விநியோகம்!
அதன் ஒரு பகுதியாக கேரளாவில் உள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரதட்சணை வழங்கவோ அல்லது வாங்கவோ மாட்டோம் என்ற அறிவிப்பில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்கி உள்ளது, வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிமொழி படிவத்தில் மாணவர்கள் கையெழுத்திட்ட பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில கவர்னரின் அனுமதி கிடைத்ததும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.