Reliance Jio 336 நாட்கள் வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் பிளான் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 க்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ:
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குகான ஆஃபர்களையும் வழங்குகிறது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தவிர ஜியோ போன் பயனர்களுக்கும் அவ்வப்போது சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ போனில் பல்வேறு விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க திட்டமிடுபவரா நீங்கள்? இதோ அரிய வாய்ப்பு!
அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் ரூ.749 விலையில் புதிய ஜியோ போன் ஆல்-இன்-ஒன் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சலுகையானது 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. ஜியோ போனில் ரூ.39 மற்றும் ரூ.69 விலை சலுகைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவைகள் நீக்கப்பட்டு ரூ.75க்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ரூ.749 திட்டமானது பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிகள் மூடல்!
இந்த திட்டத்தில் டேட்டா வசதி மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 28 நாட்களுக்கு 50 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. மற்ற பலன்களுடன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான இலவச சந்தாவும் இந்த சலுகையில் கிடைக்கிறது. 28 நாட்கள் என மொத்தம் 12 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது பயனர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.