உடுமலை செப்.22 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
உடுமலை தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (22.09.2021) மின் தடை செய்யப்படும் என்று மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை உடுமலை தேவனூர் புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதன் காரணமாக செல்லப்பம்பாளையம், சின்னபொம்மன்சாலை, வீரல்பட்டி, புளியம்பட்டி, குறுஞ்சேரி, பொன்னேகவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
அதனை தொடர்ந்து காங்கயம் கோட்டம் பெரியார் நகர் பகுதியில் புதுப்பை துணை மின் நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு ஆகிய பகுதிகளில் நாளை மேற்கண்ட அதே நேரம் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
15,000 இந்தியர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டில் வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!
மேலும் மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன் புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்