மாநில அரசு ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – புதிய அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி பதவியேற்றவுடன் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 15% ஊதிய உயர்வுடன் 113% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததான அகவிலைப்படி உள்ளிட்ட மற்ற கொடுப்பனவுகள் ஜூன் மாத தவணையுடன் திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், அசாம், ஜார்க்கண்ட், ஹரியானா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செப்.25 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
இதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையும் கணிசமாக உயர்வடைய இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகியவுடன் புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி பதவியேற்றார்.
மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டம் – நாள் ஒன்றுக்கு 90,000 மருத்துவ ஆலோசனைகள்!
இதற்கு பிறகு அம்மாநில அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் 15% ஊதிய உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஆறாவது ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்தும் ஒரு பகுதியாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அரசு அறிவிப்பின் படி, பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் 15% உயர்வு மற்றும் 113% அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.