மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டம் – நாள் ஒன்றுக்கு 90,000 மருத்துவ ஆலோசனைகள்!
இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 90,000 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதுவரை 1.20 கோடி பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது,
இ-சஞ்சீவினி திட்டம்:
2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா பரவி வந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்று போராவும் வேகத்தை காட்டிலும் நோய் குறித்த பொய்யான தகவல்கள் வேகமாக பரவியது. அதனால் மக்கள் கடுமையாக அச்சப்பட்டனர். அதை குறைக்க மத்திய அரசு சார்பில் இ-சஞ்சீவினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!
மக்கள் நேரடியாக மருத்துவர்களை சந்தித்து சந்தேகங்களை கேட்க முடியாத நிலையில் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற இ-சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையதளம் வாயிலாகவோ அல்லது ஆண்ட்ராய்டு செயலியில் மொபைல் எண்ணை பதிவு செய்து மருத்துவருடன் தொடர்பு கொண்டு காணொலி முறையில் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி வழங்கப்பட்டது.
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் வயது வரம்பு – கோரிக்கை முன்வைப்பு!
அதனை தொடர்ந்து மருத்துவ பரிந்துரைச் சீட்டு நோயாளிகளின் மொபைல் போனுக்கு மின்னணு வடிவில் அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருந்தகங்களில் மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் நாள்தோறும் 90,000 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆந்திராவில் 37.04 லட்சம், கர்நாடகம் 22.57 லட்சம், தமிழகத்தில் 15.62 லட்சம் பேர் என மொத்தம் 1.20 கோடி பேர் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.