TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்பு 2022 – என்னென்ன பதவிகள்? கல்வித்தகுதி? முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் TNPSC குரூப் 2,2A தேர்வின் கீழ் 5831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (பிப்.18) வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப் 2,2A :
தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பொஊர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மாதம் TNPSC தேர்வாணையம் ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் 2022ம் ஆண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக அதிக தேர்வர்களால் எழுத கூடிய குரூப் 2,2A தேர்வின் அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த குரூப் 2 தேர்வு ணை வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை,புரோகிராமர், கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு!
இந்த குரூப் 2 தேர்வை எழுத விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். மற்ற பிரிவினர்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு இறுதியாக நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடைபெறும். இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மேலும் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள், பதிவு, போக்குவரத்து, சிறை போன்ற பதவிகளுக்கு நேர்காணல் இல்லை. இந்த மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இன்று (பிப்.18) குரூப் 2, 2A தேர்வின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. ஏற்கனவே தேர்வாணையம் வெளியிட்ட தகவலின் படி அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வு நடைபெறும். மேலும் புதிய மாற்றங்களாக தமிழ் மொழி சேர்க்கப்பட்ட பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.