TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் வயது வரம்பு – கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் வயது வரம்பு:
தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது தேர்ச்சி சான்றிதழ் ஆயுட்காலம் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பள்ளிகள் முழுவதும் திறந்த பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் போன்றவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
IPL 2021 : PBKS vs RR இன்று மோதல் – வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிட்ச் ரிப்போர்ட், 11 அணி!
தற்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வில் 40 வயதை கடந்த பட்டதாரி ஆசிரியர்கள் பங்கு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் எண் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் இந்த அறிவிப்பால் தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கடந்த 10 ஆண்டுகளில் மூன்று முறை மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்த வருடம் தான் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் முதுகலை ஆசிரியர்களின் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் 59 வயது வரை உள்ள முதுகலை பட்டதாரிகள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
59 ,வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.