ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் கட்டுப்பாடுகள் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் நடக்க இருக்கும் ஊரக ஊள்ளட்சி தேர்தலின் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல்:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் முடிந்து விட்டது. உள்ளாட்சி தேர்தல் நடக்காத காஞ்சிபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக இரண்டு முறை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டிருந்தது.
தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை வருகை – முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பு!
இந்த கால அவகாசம் முடிந்த பிறகு, மீண்டும் தேர்தலை நடத்துவது குறித்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
TN Job “FB Group” Join Now
வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பின் அவரை முன்மொழிபவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வரும் சனிக்கிழமையன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும், வேட்புமனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் விவரங்கள் tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.