தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை வருகை – முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பு!
தமிழகத்தில் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்கள் செப்டம்பர் 18ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், இன்று சென்னை வந்துள்ளார். இவரை முதல்வர், தலைமை செயலாளர் உள்ளிட்டவர்கள் வரவேற்றுள்ளனர்.
புதிய ஆளுநர்:
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பன்வாரிலால் கோவிந்த் அவர்கள் ஆளுநராக பணியாற்றினார். இவர் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தில் முழு நேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இவர் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக முன்னர் பணியாற்றி வந்தார்.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதி இடைக்கால தடை? – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இவர் இயற்பியலில் முதுகலை பட்டமும், பத்திரிகை துறையிலும் பணியாற்றியவர். 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார்.
TN Job “FB Group” Join Now
செப்டம்பர் 18ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவானது சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 16ம் தேதியான இன்று விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். புதிய ஆளுநரை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு,காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபி சைலேந்திரபாபு, முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.